தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் சாதனை படைத்திருக்கின்றது.
பன்முக திறமை கொண்ட தனுஷ் , நடிப்பு மட்டுமல்லாது இயக்கம் ,பாடல் எழுதுவது , பாடுவது , தயாரிப்பு என பல வேலைகளை செய்பவர் .
இவ்வாறுஇருக்கையில் 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்திருந்தார்.
தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்தார் .இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் 'நான் ருத்ரன்' என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் அது சில காரணங்களால் நின்றுபோனது.
இவ்வாறுஇருக்கையில் தனுஷ் தான் இயக்கும் அடுத்த படத்தை அடுத்த வருட தொடக்கத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அந்த படத்தில் தனுஷும் நடிக்கிறார் என்றும், அதே படத்தில் முக்கியத்துவம் அதிகம் உள்ள ரோலில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்.
தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படத்திலும் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!