• Sep 20 2024

ஐஸ்வர்யாவைப் பிரிந்தாலும் ரஜனி சொன்ன சொன்ன அட்வைஸ்டை போஃலோ தனுஷ்- இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். கிட்டத்தட்ட திரைத்துறைக்கு தனுஷ் அடியெடுத்து வைத்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த திரைப்பயணத்தில் தனுஷ் சந்திக்காத அவமானங்களும், தோல்விகளும் இல்லை எனலாம். ஆனாலும் தன் மீது நம்பிக்கை வைத்து உழைத்து இன்று உலகப்புகழ் பெற்ற நடிகராக உருவெடுத்துள்ளார்.

 இந்நிலையில் இடையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார்.இதையடுத்து தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இப்படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ் தற்போது தன் ஐம்பதாவது படவேலைகளை விறுவிறுப்பாக துவங்கியுள்ளார்.


பா.பாண்டி படத்திற்கு பிறகு தன் ஐம்பதாவது படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக தனுஷ் களமிறங்க இருக்கின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இவ்வாறு செம பிசியாக இருந்து வரும் தனுஷ் தற்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக இருக்கிறாராம்.

முன்பெல்லாம் நேரம் கிடைக்கும்போது நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என இருந்து வந்த தனுஷ் தற்போது தனிமையையும், தன் குடும்பத்தினருடன் இருப்பதையுமே விரும்புகிறாராம். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம் தனுஷ்.


ஆயிரக்கணக்கில் செலவு செய்து பல புத்தகங்களை வாங்கி வரும் தனுஷ் அந்த புத்தகங்களை எல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறாராம். புத்தகம், தனிமை, ஆன்மிகம் என தனுஷ் தற்போது டோட்டலாக மாறியுள்ளார். இந்நிலையில் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலர் தனுஷ் ரஜினியின் வழியை பின்பற்றுவதாக கூறி வருகின்றனர்.

ரஜினியும் இதுபோல புத்தகம், தனிமை, ஆன்மிகம் என இருந்து வருகின்றார். எனவே தான் தனுஷ் ரஜினியை பின்பற்றுவதாக கூறி வருகின்றனர். என்னதான் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் ரஜினியின் மீது தனி அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். என்றென்றும் தலைவரின் ரசிகராகவே இருந்து வருகின்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement