சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படமும் ரிலீசுக்கு முன்பே ரூ.80 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது அப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரைலருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
அரசியல்வாதிகளை பார்த்து பயந்த நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன் அடிக்கடி வானத்தை பார்க்கிறார், அந்த நேரத்தில் எல்லாம் வாய்ஸ் ஓவர் வருகிறது. அது யார் குரல் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள்.படத்தில் வரும் வாய்ஸ் ஓவர் விஜய் சேதுபதியின் குரலாக இருக்கலாம் என தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் ரஜினி, கமல் ,தனுஷ் உள்ளிட்ட நடிகர்களிடம் இதற்காக கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுத்ததால் இறுதியில் விஜய் சேதுபதி மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் பேசி இருக்கிறார் என கூறப்படுகிறது.இருப்பினும் இது பற்றி படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. படம் வெளியானால் தான் அது யார் குரல் என்பது உறுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!