தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து தன்னுடைய 50 வது படத்தை தானே இயக்கி தானே நடிக்கவுள்ளார்.
இது தவிர சேகர் கம்முல்லா இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம் என படு பிஸியான லைன் அப் வைத்திருக்கின்றார்.இப்படி சினிமாவில் இவர் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார். இவருடைய கெரியரில் மிகவும் முக்கியமான திரைப்படம் தான் யாரடி நீ மோகினி.
முதலில் அந்தப் படம் தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி ஹிட்டடித்தது. அதனை அவரது உதவி இயக்குநராக இருந்த மித்ரன் ஆர்.ஜவஹர் தமிழில் ரீமேக் செய்திருந்ததார். படம் மெகா ஹிட்டாகி தனுஷின் க்ளாசிக் படங்களில் ஒன்று என்ற பெயரை பெற்றிருக்கிறது.
படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக இருந்தது தனுஷ் - நயன்தாரா கெமிஸ்ட்ரி. இன்றுவரை கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக அந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் நினைக்கப்படுவதற்கு காரணம் அந்தப் படம்தான். இந்த சூழலில் யாரடி நீ மோகினி படத்தில் முதலில் நயன் தாராவுடன் நடிப்பதற்கு தனுஷ் தயக்கம் காட்டியது தெரியவந்திருக்கிறது.
அதாவது இந்தப் படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்த மித்ரன் தனுஷிடம் கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். பிறகு இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு தனுஷோ என்னது நயன்தாராவா அவங்க என்கூட ஸ்க்ரீனில் நின்றால் என்னைவிட முதிர்ச்சியாக தெரிவாங்க என கூறினாராம்.
ஆனால் விடாத மித்ரன் ஒருவழியாக பேசி தனுஷை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாராம். மித்ரன் ஆர்.ஜவஹர் கடைசியாக தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!