தன் மூத்த மகன் யாத்ராவின் கேரக்டர் சூப்பரான கேரக்டர் என்று தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியது பற்றி தற்போது இணையத்தளத்தில் பேசப்பட்டு வருகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனஷுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இது அவர்களின் ரசிகர்களிடத்தே பெரும் கவலையாகவே உள்ளது.
மகன்கள் அவரது தயான ஐஸ்வர்யாவுடன் இருக்கிறார்கள். அவ்வப்போது சென்று அவர்களை அழைத்து வந்து நேரம் செலவிடுகிறார் தனுஷ்.
யாத்ரா கைக்குழந்தையாக இருந்தபோது செய்த சேட்டைகள் குறித்து தனுஷ் முன்பு பேட்டி ஒன்றில் கூறிஇருந்தார். அது குறித்து தற்போது ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பேட்டியில் தனுஷ் தெரிவித்ததாவது....
என் மகன் சூப்பர் கேர்க்டர். வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை மட்டும் தான் உடைப்பான். சீப்பான பொருட்களை எல்லாம் தொடவே மாட்டான். டேய் உங்க தாத்தா தான்டா சூப்பர் ஸ்டார், உங்க அப்பா இல்லடா என்று அடிக்கடி சொல்வேன். ஆனால் அவன் கேட்க மாட்டான்.
எங்கம்மாவிடம் சென்று புகார் செய்ய கூட முடியவில்லை. நீயே அப்படித் தான் இருந்த என்பார்கள் என்றார்.
கெரியரை பொறுத்தவரை தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. எனினும் இதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
மேலும் அதே தேதியில் தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!