தமிழ் சினிமாவில் மறைந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் விவேக். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கருத்து மிகுந்த தனது காமெடியால் பல ரசிகர்களைக் கவர்ந்தார்.இது தவிர மரம் நடும் சமூக பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இருப்பினும் கடந்த வருடம் மாரடைப்பால் திடீரென இறந்த விட்டார். இவர் இறப்பானது தற்பொழுது வரை நம்பமுடியாத விடயமாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் விவேக் தனுஷுடன் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
அந்த வகையில் தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி, உத்தம புத்திரன், படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றனர்.இப்படங்களில் அசால்ட் ஆறுமுகம், எமோஷ்னல் ஏகாம்பரம் என்னும் கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இதனையடுத்து தனுஷிற்கு விவேக் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தாராம். அதாவது உத்தமபுத்திரன் படம் இயக்கிய மித்ரன் ஜவகருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து தனுஷ் மீண்டும் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தாராம்.
தற்போது திருச்சிற்றம்பலம் படம் மூலமாக தனுஷ் அதை செய்திருக்கிறார். விவேக்கின் பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விவேக்கின் கனவை நிறைவேற்றியதற்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!