தமிழ் சினிமாவின் தலை சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் 'நானே வருவேன், வாத்தி' ஆகிய படங்களில் நடித்து முடித்த அதேவேகத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதாவது அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படமானது ஜானர் ஆக்சன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்படத்திற்கான ஷூட்டிங் நிகழ்வுகள் தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மழை காரணமாக தற்போதைக்கு அப்படத்தினுடைய சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தனுஷ் தனது அடுத்த படத்திற்கான பூஜையை போட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
அந்தவகையில் தனுஷ் நடிக்கவுள்ள இப்புதிய படத்தை சேகர் கம்முலா இயக்கவுள்ளது குறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. அத்தோடு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் உடைய படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதுமட்டுமல்லாது தனுஷ் - சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகும் இந்தப் படமானது 1950களின் கால பின்னணியில் பொலிட்டிக்கல் ஜானர் படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாக உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இப்போதிருந்தே அதிகரித்துள்ளது.
இவ்வாறான இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தனுஷின் புதிய படத்திற்கான பூஜை, இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!