நடிகர் தனுஷின் 50-ஆவது படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றினை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சிறப்பான வகையில் போஸ்டரையும் வெளியிட்டிருந்தது. இதில் அதிகமான வீடுகளும் புகை மண்டலமும் சூழ்ந்து காணப்படும் வண்ணம் அமைந்திருந்தது.
அந்தவகையில் தன்னுடைய 50-ஆவது படத்தை தனுஷ் தானே இயக்கி நடிக்கவுள்ளார். சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படம் தான் இதுவரை தனுஷ் நடித்ததில் அதிக பட்ஜெட் கொண்ட படம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக எஸ்.ஜே. சூர்யா மற்றும் சந்தீப் கிஷான் நடிக்கிறார்களாம்.
அத்தோடு காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படம் வடசென்னை சார்ந்த கதைக்களத்தில் உருவாகிறதாம். எனவே கேப்டன் மில்லர் படம் முடிந்தவுடன் இப்படத்தின் வேலைகளை தனுஷ் ஆரம்பிப்பார் எனக் கூறப்படுகின்றது.
Listen News!