• Sep 20 2024

தனுஷின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்-அடுத்தடுத்தாய் நிகழப்போகும் சம்பவம்-வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடத்தே தனக்கான இடத்தை படித்திருப்பவர் தான் நடிகர் தனுஷ்.இவரின் நடிப்பில் கடந்த 18ஆம் திகதி திரைக்கு வந்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

கர்ணன் படத்திற்கு பின்னர்  தனுஷ் நடித்து திரையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூலிலும் பட்டையை கிளப்பி வருகின்றது.

வசூலில் இன்று வரை ரூ. 65 கோடியை கடந்துவிட்டது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான்  வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. வாத்தி படத்திற்கு முன்பே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement