• Sep 20 2024

தனுஷின் 50 வது படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது இசையமைப்பாளரா?- அவரே கூறிய ரகசியத் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து இயயக்குநர் அருண் மாதேஷ் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து தனுஷ் தனது 50-வது படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இப்படத்தினை நடிகர் தனுஷ் தான் இயக்கி வருகின்றார். இப்படத்தில்  மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.


இப்படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.இப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளல் தேவா ஒரு பேட்டியில் கலந்து கொண்டு கூறியதாவது

தனுஷ் என்னை அவரது 50 படத்தில் வில்லனாக நடிக்க கூப்பிட்டார். இதை கேட்டதும் ஷாக்காகி விட்டேன்.அப்போது நான், அவரிடம் என்னை எதற்கு தேர்ந்தெடுத்தீர்களா என்று கேட்டேன். இதற்கு தனுஷ், சார் உங்களுடைய நார்த் மெட்ராஸ் ஸ்லாங் அருமையாக இருக்கும். இந்த படத்திற்கு இது தேவை என்று கூறினார்.


அதற்கு நான், வசனத்தை மறந்துவிடுவேன். ஞாபகம் வைக்க கஷ்டம் என்று சொன்னேன். உடனடியாக தனுஷ், ஓகே சார்.. பிரச்சனை இல்லை விடுங்க என்று கூறியதாக தேவா பேட்டியில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Advertisement