தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து வருகின்றார். இவரது நடிப்பில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றது.
இந்த நிலையில் இவர் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், தனது 20 ஆண்டுகால நிறைவு பயணத்தை குறித்தும், தனக்கு முக்கியமான நபர்களுக்கு நன்றி தெரிவித்தும் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதில், தனது ரசிகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துள்ளார். பின் சினிமாவை நேசிப்பவர்களுக்கும், பிரஸ், மீடியா, தொலைக்காட்சி, சமூக வலைதள வாசிகளுக்கும் நன்றி கூறியுள்ளார்.
மேலும், தனது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு படத்திற்கு கேமராவிற்கு பின் நின்று வேலை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது குருவும் அண்ணனுமான செல்வராகவனும் நன்றி கூறியுள்ளார்.
தந்தை மற்றும் தாய்க்கு நன்றி கூறியுள்ள நடிகர் தனுஷ் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் பெயரை அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!