தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பை தொடர்ந்து அடுத்தடுத்து தன் வேலைகளில் பிஸியாக உள்ளார்.
சமீபகாலமாக தனுஷின் திரைப்படங்கள் வெளியாகியும் தெரியாமல் இருந்தன. அதற்கு முக்கிய காரணம் அவரின் படங்கள் OTT யில் வெளியானது தான்.
அத்தோடு ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் என தொடர்ச்சியாக அவரின் படங்கள் OTT யில் வெளியாகி தோல்வியை சந்தித்தன. எனினும் இதன் காரணமாக தனுஷின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியை சந்தித்தது. அவரின் சம்பளமும் கணிசமாக குறைந்தது. இருப்பினும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வந்தார் தனுஷ்.
மேலும் இதில் மித்ரன் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்து சாதனை படைத்து என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிய தனுஷின் நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது.
செல்வராகவன் மற்றும் தனுஷ் பல வருடங்களுக்கு பிறகு இணையும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார. தாணு இப்படத்தை தயாரிக்க விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமூகத்தளங்களில் இப்படத்தின் கதைக்கரு பற்றிய தகவல் வேகமாக பரவி வருகின்றது.
அதாவது நானே வருவேன் திரைப்படம் பேய் படமாக உருவாகியுள்ளதாகவும் , படத்தின் இயக்குநரான செல்வராகவன் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே தனுஷ் முதல்முறையாக பேய் படத்தில் நடிப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!