தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில், நானே வருவேன் திரைப்படத்தை தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதோடு மாத்திரமன்றி செல்வராகவனும் நடித்து வருகின்றார்.இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், இந்த படத்தில் தனுசுடன் நடிகை இந்துஜா நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார்.
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடலுக்கு செல்வராகவன் வரிகள் எழுதியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.மேலும் இந்த பாடலை பார்க்கையில் தனுஷ் கதாபாத்திரத்தின் பின்னணியை விரிவாக சொல்லியிருப்பது போல் அமைந்துள்ளது.
மேலும் இந்த பாடல் யூ- ட்யூபில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் முழுவதும் தனுஷ் புகைப்பிடிப்பது போல் அதிக காட்சி இடம்பெற்றுள்ளது, படத்திலும் தொடர்வது போல் தெரிகிறது.
ஏற்கனவே 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் (ரகுவரன் கதாபாத்திரம்) புகைபிடித்த காட்சி தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்பு உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது.
இந்நிலையில் மீண்டும் 'நானே வருவேன்' பாடலில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதால் சிலர் புகைபிடிப்பதற்கெதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் அந்த வகையில் சமூக ஆர்வலர்கள், தனுஷ் போன்ற முன்னணி பிரபலங்கள் தொடர்ந்து தன் படங்களில் இது போன்று காட்சி வைப்பது அவரது ரசிகர்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் என கூறி வருகின்றனர்.
Listen News!