டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இப்போது இந்திய சினிமாவை கவனிக்க வைக்கும் அளவிற்கு ஒரு முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம்.
கடந்த வருடம் பொன்னியின் செல்வன் என்ற படத்தின் மூலம் நடிப்பில் நம்மை மிரட்டியிருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இப்படத்திற்காக நடிகர் விக்ரம் கடின உழைப்பை போட்டுள்ளாராம். ./ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க விக்ரம் ரூ. 28 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!