• Sep 20 2024

நடிகர் யாஷ் ரூ.50 கோடியை நன்கொடையாகக் கொடுத்தாரா?- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கேஜிஎஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் யாஷ். இவர் இப்படத்தின் மூலம் கன்னட மொழியில் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாகிய இப்படம் 1000ம் கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.

இப்படங்களைத் தொ்ர்ந்து கே ஜி எப் திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்திற்காக இயக்குநர் யாஷ் பிரசாந்த் நீல் கடுமையாக உழைத்து வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.


 இந்நிலையில், நடிகர் யாஷ் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்று தரிசனம் செய்ததாகவும் கோவிலின் கட்டுமான பணிகளுக்காக ரூ.50 கோடி நன்கொடை வழங்குவதாக தெரிவித்ததாகவும் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியாகிய உண்மை தகவலின் படி யாஷ் அயோத்தி சென்றதாக கூறி பரப்பப்படும் புகைப்படம் கடந்த ஆண்டு அவர் திருப்பதி சென்றிருந்தபோது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.  மேலும், நடிகர் யாஷ் அயோத்தி கோவில் கட்டுமான பணிகளுக்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என பிரபல ஊடகம்  ஒன்று கூறியுள்ளது.



Advertisement

Advertisement