• Sep 20 2024

நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாதித்த பணத்தை இங்கு தான் முதலீடு செய்துள்ளாரா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதுமட்டுமல்லாது நடிகர் கார்த்தியின் நடிப்பின் மூலம் வெளியாகி இருந்த 'சுல்தான்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார். தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்திலும் நடித்து வருகின்றார். தொடர்ந்து ஹிந்தி, கன்னட படங்களிலும், ஏகப்பட்ட விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார்.

இவரின் சிரிப்பினையும், குழந்தைத் தனமான நடிப்பினையும் ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அதுமட்டுமன்றி இளசுகளின் கனவுக் கன்னியாகவும் மாறிவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற இவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதாவது பெரும்பாலான நடிகைகள் தாம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்ற பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருவது வழக்கம். நடிகை ராஷ்மிகா மந்தனா இதற்கு ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல.

பிற நடிகைகளைப் போலவே ராஷ்மிகாவும் ஓடியோடி சம்பாதிக்கும் பணத்தை அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் Plum என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அவர் முதலீடு செய்திருக்கும் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் ராஷ்மிகா மந்தனாவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement