ஜாதி, மதம், இனம் எல்லாவற்றையும் தாண்டி 13 வருடங்கள் காதலித்து திருமணம் செய்த நடிகை ரோஜாவின் சுவாரஷ்யமான காதல் கதை…
1990 களில் தமிழ், தெலுங்கு துறைகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா.தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம்வந்தார் நடிகை ரோஜா.
ரோஜா பிரபல நடிகையாக வலம் வந்த போது, இயக்குநர் செல்வமணியும், நடிகை ரோஜாவும் காதலித்து வந்தனர்.இச் சந்தர்ப்பத்தில் இயக்குநர் செல்வமணி படங்களை இயக்கியது குறைய தொடங்கியது. இதனால் மார்க்கெட் இல்லாத ஒரு இயக்குநரை திருமணம் செய்துகொள்ள போகிறாயா என ரோஜாவின் மனதை பலர் குழப்பியபோதும், தனது காதலின் மீது உறுதியாக இருந்து செல்வமணியை மணமுடித்தார் ரோஜா.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக வலம்வந்த நடிகை ரோஜா 10 ஆகஸ்ட் 2002 அன்று இவர் திரையுலகில் பிரபல்யமான இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமா திரையுலகிலும் இப்படி ஒரு தம்பதிகளா! என்று வியப்பூட்டும் வகையில் இவர்களுடைய திருமணம் முடிந்தது. ரோஜா அவர்கள் ஜாதி, மதம், இனம் எல்லாத்தையும் தாண்டி தான் காதலித்தவரையே, கரம் பிடிக்க 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு, காதல் அனுபவங்களை பற்றி நடிகை ரோஜா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை ரோஜா கூறியதாவது:-
நான் தெலுங்கு, தமிழ் , என பல இயக்குநர்களுடன் படங்களில் பணியாற்றினாலும் செல்வாவிடம் பணியாற்றிய அந்த அனுபவம் எனக்கு கிடைக்காது.
ஏனென்றால், செல்வாவின் நற்பண்புகளால் நான் மிகவும் கவரப்பட்டேன். அதுமட்டுமில்லாமல் என்னை பற்றி எனது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையுடனும், மிகப் பொறுப்புணர்வோடு பேசி வந்திருப்பார். செல்வமணி, இதனால் பொறுப்புணர்வோடு அம்மாவுக்கும், அண்ணனுக்கும் செல்வமணியை ரொம்ப பிடிக்க ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய காதலை செல்வமணி மிக அழகாக என் அம்மாவிடம் கூறினார். அவர் என்னிடம் எப்போதும் போலவே தான் பழகி வந்தார். அதனால் செல்வமணி என் மீது வைத்த அக்கறை பாசத்தை எல்லாம் தாண்டி பிரியம் உள்ளது என்பது அம்மாவுக்கு தெரிந்தது.
எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு சாதியில் பெண்ணோ , மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் சாதியை மீறி எங்களை கவர்ந்து விட்டார் செல்வா
பின்பு என் அம்மா நம் மகளுக்கு ஏற்றவர் இவர்தான் என முடிவு செய்து விட்டார்.இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்திற்கு தடையில்லை.
ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கின்றேன். அன்றைக்கு எனது பிறந்தநாளும் கூட அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். நீ இப்போது பிஸியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி எப்போது, போதும் என்று தோன்றுகின்றதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றார். அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்' என்று எனக்குத் தோன்றியது . நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
செல்வா எனக்காக 13 வருடம் காத்திருந்து கைப்பிடித்தார்.நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் நடிகை ரோஜா. 13 வருடங்கள் கடந்து திருமணம் செய்கையில் திருமணத்தின் போது இவரது வயதை கேட்டு நான் இவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் சொன்னதாகவும் திருமணத்திற்கு முன்னர் தான் வயது தெரியாமல் காதலித்து விட்டேன் என்றும் கூறினார்.அதற்கு தன்னுடைய அக்கா ‘இதெல்லாம் முன்னாடியே நீ கேட்டு இருக்கனும், இப்ப சொல்லி என்ன ஆக போது என்று சொன்னதாகவும் வேடிக்கையாக கூறியுள்ளார்.இன்று ரோஜா- செல்வமணி தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
பிற செய்திகள்:
- பீச்சில் குட்டை சோட்சுடன் ரட்சிதா வெளியிட்ட வீடியோ-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா விக்ரம் படம்.. வெளியானது தகவல்..!
- இணையத்தில் தீயாய் பரவி வரும் நடிகர் யாஷின் வீடியோ..!
- திருட்டுத்தனமாக கோபியின் போனை எடுத்துப் பார்த்த பாக்கியா– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- உங்களுக்கு பிரச்சனை நிறைய வரும்னு அட்வைஸ் பண்ணாரு விஜய் சேதுபதி – Village Cooking சேனல் வெளியிட்ட வீடியோ…!
- பாக்கியலட்சுமி சுசித்திராவா இது..? சேலையில் இப்படியொரு குத்தாட்டமா…வைரலாகும் வீடியோ..!
- அச்சு அசலாக அம்மா போலவே… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!