பிக்பாஸ் 7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி ஆரம்பமாகி இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சயமான பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் மௌனராகம் சீரியல் பிரபலமான ரவீனா தாஹாவும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரவீனா சக போட்டியாளரான மணி சந்திராவின் கையைக் கடித்து சில்மிஷம் செய்த வீடியோ ஒன்று நேற்றைய தினம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
இதனையடுத்து ரவீனாவின் அம்மா ரவீனா குறித்துப் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "ரவீனா எல்லாக் கஷ்டத்தையும் பார்த்து வளர்ந்திருக்கா, அவ சின்ன வயசில் இருந்து கீழ பாயில படுத்ததில் இருந்து, ஆடம்பரமான பெட்டில் படுக்கும் வரை நிறைய கஷ்டம் அனுபவிச்சிருக்கா,
ரவீனாவின் அப்பா அடிக்கடி அவளுக்கு சொன்ன விஷயம் நான் உன்னை விஜய் டிவியில் பார்க்கணும் என்றுதான், ஆனால் இப்போ அவர் இல்ல பார்க்க முடியல, உடம்பு முடியாமல் இறந்திட்டார், அப்பா உடம்பு முடியாமல் ஹாஸ்பிட்டலில் இருந்தப்போ கூட ரவீனா விஜய் டிவி ஆடிஷனுக்கு போய் இருக்கா" எனவும் கூறி உள்ளார் அவரின் அம்மா.
மேலும் "ஒரு குடும்பத்தோட கஷ்டம் அவளுக்கு நல்லாவே தெரியும், எது வந்தாலும் பார்த்துக்கெல்லாம் என்று லைப்பை ஹாப்பியாக கொண்டு செல்வா, அதிகமான ஆடம்பர வாழ்க்கை அவளுக்கு பிடிக்காது, குடிசையில் இருக்கணும் என்பதற்காக ஆசைப்பட்டு காரை எடுத்துக்கிட்டு கிராமப்புறங்களுக்கு செல்வாள், அதேபோல வீட்டு வேலை எல்லாமே செய்வாள்,
ரவீனாக்கு சண்டை போடுறது பிடிக்காது, சண்டை என்று ஒன்று வந்தால் அவ அந்த இடத்தில் நிற்க மாட்டா, ஆனால் அவளுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது சண்டை போட்டால் அதைப்பார்த்து சிரிப்பா, அவள் தப்பு பண்ணினாலும் அதை ஒத்துக்கொள்ளுவாள், எனக்கு தெரிந்தளவிற்கு ரவீனா எப்பவும் தப்பு பண்ண மாட்டா எனவும் கூறியுள்ளார் அவரின் அம்மா.
Listen News!