• Sep 20 2024

இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போனது ஈஸ்வரியும் செல்வியுமா?- பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கவுள்ள டுவிஸ்ட்- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக TRP டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது கோபி-பாக்கியாவிற்கான சண்டைகள் தான் அதிகம் வருகின்றன.


அண்மையில் கேன்டீனில் பிரச்சனை ஏற்பட ராதிகா அவர்களது கான்டிராக்ட் இனி கிடையாது என கூற பாக்கியா எப்படியோ அழுது புலம்பி தனது ஆர்டரை தக்க வைத்துக் கொள்கிறார்.இப்போது நிறைய வேலைகள் இருப்பதால் Spoken English செல்வதை நிறுத்தி விட்டார்.


மேலும் ஜெனிக்கு வளைகாப்பு நடந்து முடிந்ததோடு ஜெனி தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்று விட்டார். இது ஒரு புறம் இருக்க கோபி இனியாவை ரோட் ட்ரிப் கூட்டிட்டுப் போவதாக இருந்தார்.பின் மயூ வயதுக்கு வந்து விட்டதால் ராதிகா கோபியை ட்ரிப்புக்கு போகக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்.


இதனால் இனியாவை யார் ட்ரிப்புக்கு கூட்டிட்டு போவார்கள் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் இனியா பாக்கியா,ஈஸவரி, செல்வி எல்லோருடனும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதனால் பாக்கியா தான் இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போயிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement