இயக்குநராக மட்டுமல்லாது நடிகராக பட்டையை கிளப்பி வருகின்றார் எஸ்.ஜே.சூர்யா. இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அன்பே ஆருயிரே,மகாநடிகன்,கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை வழங்கவில்லை. இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்கத்தொடங்கினார்.
எஸ்.ஜே சூர்யா பல வருடங்களுக்கு முன்பு ஞான வேல் ராஜாவிடம் படம் பண்ணி தருவதாக கூறி அவரிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.
ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது. அதனால் அப்போதே எஸ்.ஜே சூர்யா வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க முன்வந்துள்ளார்.
எனினும் அப்போது ஞான வேல் பணத்தை வாங்காமல் அதற்கு பதிலாக படத்தில் நடிக்க சொல்லியுள்ளார். தற்போது எஸ்.ஜே சூர்யா டாப் ஹீரோவாக வலம் வரும் நிலையில் கேட்கும் சம்பளத்தை ஞான வேல் கொடுக்க மறுக்கிறாராம்.
அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்தால் வட்டியுடன் கேட்கிறாராம். இந்த பிரச்சனையால் எஸ்.ஜே சூர்யாவிற்கு ரெட் கார்ட் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
Listen News!