தமிழ் சினிமாத் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சத்யராஜ். இவர் ஆரம்ப காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இருப்பினும் 'கடலோர கவிதைகள்' என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகராக அறிமுகமானார்.
இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒருவராகவும் திகழ்ந்து வருகின்றார். சினிமாவைப் பொறுத்த வரையில் எப்போதுமே திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து ஒரு நல்ல ஆதரவை பெற்று வரும் நடிகர்கள் பலருமே தமது சொந்த இடத்தில் பூர்வீக சொத்தினை வைத்திருப்பது வழமை.
இந்நிலையில் தான் சத்யராஜ் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது, சத்யராஜ் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் ராம்நகர் என்ற ஊரில் பிறந்தவர். அங்கு அவருக்கு சொந்தமான வீடு ஒன்றும் இருந்தது. ஆனால், அந்த வீட்டை சத்யராஜ் பின்பு விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சத்யராஜ் தன் சொந்த இடத்தில் பள்ளி மற்றும் பல வேலைகளையும் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அவர் தான் படித்த பள்ளிக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் தன்னால் முடிந்த பல உதவிகளையும் செய்து இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் முன்னர் சத்யராஜின் சொந்த வீடு இருந்த தெருவிற்கு அருகில் அவருடைய தங்கையும் இருக்கிறார். அங்கு அவரின் மருத்துவமனை இருக்கின்றது. அதில் அவரின் தங்கை இன்றுவரை மகளிர் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!