• Sep 20 2024

பாடகி சின்மயி வாடகைத் தாய் மூலம் தான் குழந்தைகளைப் பெற்றாரா?- அவரே கூறிய முக்கிய பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் சிறந்த பாடகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பாடகி சின்மயி. இவர் தனது வசீகரமான குரலின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இவருக்கும் நடிகர் ராகுல் ரவிந்திரனுக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சுமார் 8 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத நிலையில் இருந்த இவர்களுக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தனர். இதைப்பார்த்த சிலர் "நீங்கள் வாடகைத்தாய் மூலமாகவா குழந்தை பெற்றுள்ளீர்கள்?, கர்ப்பமாக இருந்த புகைப்படத்தை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை" எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த பாடகி சின்மயி "நான் கர்ப்பமானது எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும், நான் முன்னரே கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தால் பல வதந்திகளை பரப்பியிருப்பார்கள்" எனப் பதிலளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement