அப்போ ஒன்னு இப்போ ஒன்னு என்று விக்ரமன் மாறி மாறி பேசுவதால் நெட்டிசன்கள் சிக்கி சோசியல் மீடியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 46 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து தானாக வெளியேற மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி தற்போது 15போட்டியாளர்கள் உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும் அந்த வகையில் இந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீதான குற்றங்களை குறித்து விவாதம் செய்து வருகிறார்கள்.
எனினும் அந்த வகையில் விக்ரமன், ஜனனி மொழி விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடத்தப்பட்டது அதில் இளவரசியாக ஜனனி இருந்தார். டாஸ்க் முடிவில் யார் சிறப்பாக செய்யவில்லை என்று பிக் பாஸ் கேட்டதற்கு விக்ரமன், ரக்ஷிதா – ஜனனி பெயரை குறிப்பிட்டு ஜனனி வந்து தமிழ் பேசுவதில், செம்மொழி பேசுவதில் சிரமம் என்று நினைக்கிறேன். அதனால் அவர் சரியாக பேசக்கூட வில்லை என்று கூறியிருந்தார். இதை இந்த வாரம் கோர்ட் டாஸ்க்கில் விவாதம் செய்து இருக்கிறார்கள்.
அதற்கு விக்ரமன், நான் மொழி என்று தான் சொன்னேன். தமிழ் என்று சொல்லவில்லை என மாற்றி பேசி இருக்கிறார்.எனினும் அதற்கு ஜனனி உங்க தமிழ் என்று சொன்னீர்கள். அது கஷ்டமாக இருந்தது என்று விவாதம் செய்கிறார்கள். இதனால் குயின்சி, அசீம் இடையே விவாதம் இடம்பெற்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் விக்ரமன் கடந்த வாரம் பேசிய வீடியோவை குறும்படமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
அதன் மூலம் விக்ரமன் மாறி மாறி பேசி இருப்பது தெளிவாக தெரிகிறது. இதனை அடுத்து நெட்டிசன்கள், எதற்கு இப்படி மாறி மாறி பேசுகிறீர்கள். சொல்லப்போனால், ஜனனி பேசுவது தான் செம்மொழி. ஆனால், அவருடைய பேசும் தமிழ் மொழியே புரியவில்லை, சரியில்லை என்று கூறியிருப்பதெல்லாம் தவறான ஒன்று. அப்போது ஒரு கதை, இப்போது ஒரு கதை சொல்லும் விக்ரமன் ஒரு சொம்பு தூக்கி என்றெல்லாம் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.
அத்தோடு நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து பலரும் விக்கிரமனுக்கு ஆதரவாக தான் பேசியிருந்தார்கள். நேர்மையானவர், அவருடைய பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது என்றெல்லாம் அவருக்கு குரல் கொடுத்திருந்தார்கள்.மேலும் அதுமட்டுமில்லாமல் இந்த சீசனின் டைட்டில் வின்னர் கூட விக்ரமன் ஆக வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது வந்த குறும்படத்தின் மூலம் விக்ரமன் மீது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுதான் விக்ரமனின் உண்மை முகமா? இனிவரும் நாட்களில் விக்ரமன் நீடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
🔴 | KURUMPADM FOR VIKRAMAN | 🔴
He said Janany “Ungal thamizh” now changing his words as “unga mozhi” he is finally caught
Double standard chameleon #BiggBossTamil #Azeem #Azeem𓃵 #JananyArmy #AzeemArmy #BiggBossTamil6 #JananyArmy pic.twitter.com/0rQfVIfAOM
Listen News!