• Sep 20 2024

இப்படியெல்லாம் ஓவரா பண்ணாரா தமன்னா? சன் பிக்சர்ஸ் பரிசு கொடுக்காததற்கு காரணம் இது தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. 

படத்தின் ரிலீஸ் நாளிலிருந்தே ஜெயிலர் படம் வசூலை அள்ளி வந்ததாகவே பல தகவல்கள் வந்தன.


அதன்படி  இதுவரை 650 கோடி ரூபாயை தாண்டி வசூல் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் படம் ரிலீஸாக காத்திருக்கிறது.


இந்தச் சூழலில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டதால் கலாநிதி மாறன் பரிசுகளை அள்ளி கொடுத்துவருகிறார். அதன்படி ரஜினி வீட்டுக்கு சென்ற அவர் செக்கை கொடுத்து இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காட்டி எது வேண்டுமோ எடுத்துக்கொள்ள சொன்னார். அதேபோல் நெல்சனிடமும், அனிருத்திடமும் சில கார்களை கலாநிதி காட்ட அவர்கள் போர்ஷே கார்களை பரிசாக பெற்றுக்கொண்டனர். ரஜினிக்கு கொடுத்தது போல் அவர்களுக்கும் செக் ஒன்றை பரிசாக கொடுத்தார்.


இதற்கிடையே ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளாக காவாலா பாடல் வெளியானது. அனிருத்தின் இசை பயங்கரமாக இருந்தாலும் அதைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்தது தமன்னாவின் நடனம். அந்த நடனத்தை பார்த்த பலரும் அதேபோல் ரீல்ஸ் செய்து வீடியோக்களை போட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தமன்னாவுக்கு ஏன் பரிசு கொடுக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் தமன்னாவுக்கு ஏன் பரிசு கொடுக்கப்படவில்லை என்பது குறித்த தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் சுற்றி வருகிறது.


அதன்படி, காவாலா பாடல் ஷூட்டிங் நடந்த சமயத்தில் தமன்னா ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டினாராம். அந்த சமயத்தில் சில பாலிவுட் படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். இதன் காரணமாக காவாலா பாடலுக்காக சொன்ன நேரத்தில் வராமல் இருந்தாராம். அவர் வராததால் ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருக்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டதாம். 


ஷூட்டிங்கை முடித்தால் போதும் என நினைத்த படக்குழுவும் பொறுமையாக இருந்ததாம். அதையெல்லாம் மனதில் வைத்துதான் தற்போது தமன்னா இந்த வெற்றி கொண்டாட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் என்ற தகவல் சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement