'வணக்கம் சென்னை' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக மாறியிருப்பவர் கிருத்திகா உதயநிதி. இவர் பிரபல தயாரிப்பாளரும், நடிகரும், சிறந்த அரசியல் வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் ஆவார்.
அரசியல் குடும்பத்தை சார்ந்த இவர் 'வணக்கம் சென்னை' என்ற படத்தினைத் தொடர்ந்து 'காளி' என்ற படத்தினையும் இயக்கியுள்ளார். இவ்வாறாக படங்களை இயக்கி வந்த கிருத்திகா உதயநிதி தற்போது வெப்தொடர் பக்கம் சென்றிருக்கிறார். அதாவது காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிசந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்டோரை வைத்து 'பேப்பர் ராக்கெட்' எனும் வெப்தொடரை இயக்கியிருக்கிறார். மேலும் இது ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
அத்தோடு இவ் வெப்தொடரானது குடும்பத்து பிரச்சனையை மையமாக கொண்டு அமைந்திருப்பதால் பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருக்கின்றது. அதாவது ஆபாச காட்சிகள் எதுவும் இல்லாமல் நம் குடும்பத்து ஆட்களை பார்ப்பது போன்று இத்தொடர் இருக்கிறது என்று பேப்பர் ராக்கெட்டை பார்த்தவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கிருத்திகா பேசிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதாவது "பேப்பர் ராக்கெட்டில் ஏற்படும் சொத்து பிரச்சனைகள், அதனால் குடும்பத்தார் இடையே ஏற்படும் வாக்குவாதம் எல்லாம் ரசிகர்களை கவரும் என்று நான் நம்புகிறேன்" என அதில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் இந்த வெப்தொடரில் மட்டுமன்றி தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் சொத்து பிரச்சனை வந்ததாகவும், அப்பொழுது உறவினர்கள் பேசிய பேச்சை எல்லாம் மையமாக வைத்து தான் பேப்பர் ராக்கெட் காட்சிகளை உருவாக்கியதாகவும் மனதை உருக்கும் வகையில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் சொத்து பிரச்சனை ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறாக தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்ததையே பேப்பர் ராக்கெட்டில் காட்டியிருக்கிறாராம் கிருத்திகா. இந்நிலையில் பேப்பர் ராக்கெட்டை பார்க்காத பலரும் கிருத்திகா இவ்வாறு கூறியதை கேட்டதும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனக் கூறி வருகின்றார்கள்.
பிற செய்திகள்
- இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை படைத்த யோகி பாபு… நல்லா தான் யோகம் அடிக்குது போல..!
- விஜய்யின் தந்தையிடம் அடி வாங்கிய இயக்குநர் ஷங்கர்…காரணம் என்ன..?
- உங்களுக்குள்ள ரொமான்ஸ் எப்படி இருந்திச்சு…அதர்வா சொன்ன அந்தப் பதில்…கலாய்க்கும் ரசிகர்கள்..!
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்…போடப்பட்ட பிடி வாரண்ட் உத்தரவு..!
- தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோன்… இவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!