தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்குபவர் தான் கவிஞர் வைரமுத்து. இவர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான நிகழ்கள் என்னும் திரைப்படத்தில் முதல் முதலாக பாடல் வரிகளை எழுதியிருந்தார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.இவருடைய பாடல்கள் காலம்கடந்து தற்போதும் ரசிக்கப்படும் ஹிட் ஆகி இருக்கின்றன.
வைரமுத்துவில் ஹிட் பாடல்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும். ஏராளமான விருதுகளையும் அவர் வென்று இருக்கிறார். சமீப காலமாக அவர் பாடல்கள் எழுதுவது குறைந்திருப்பதற்கு காரணம் அவர் சிக்கிய சர்ச்சைகள் தான்.வைரமுத்து இதுவரை ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து இருக்கிறாராம். அவர் ஜோடி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வருவார். காதல் கடிதம் தீட்டவே பாடலுக்கு முன் வரும் காட்சி அது.
இயக்குநர் பிரவீன் காந்தி தற்போது அளித்திருக்கும் பேட்டியில் அது பற்றி பேசி இருக்கிறார். வைரமுத்து ஆரம்பத்தில் இருந்தே நடிக்க முடியாது என கூறிவந்தாராம், ஆனால் பல மாதங்கள் கெஞ்சி தான் அவரை நடிக்க வைத்திருக்கிறார்.
இறுதியில் படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் வைரமுத்துவுக்கு சம்பளம் கொடுக்க தனது சம்பளத்தை இயக்குநர் விட்டுக்கொடுத்தாராம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!