• Sep 20 2024

காபி அடித்து படம் எடுத்தாரா … ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்த வெங்கட் பிரபு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான மங்காத்தா, பிரியாணி ,மாநாடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களியே பேராதரவைப் பெற்றிருக்கின்றது.

அதன்படி சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

அப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மதலீலை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.இதனிடையே தற்போது நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் வெங்கட் பிரபு ஒரு கொரியன் படத்தை காபி அடித்து தான் மாநாடு படம் எடுத்தார் என நெட்டிசன் விமர்சித்து இருக்கும் நிலையில் அதற்க்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கின்றார்.

மாநாடு படத்தில் சில படங்களில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த படங்களை எல்லாம் நீங்கள் இன்னும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என கூறி பதிலடி கொடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

Advertisement

Advertisement