தமிழ் சினிமாவில், தென்மேற்குப்பருவக்காற்று என்ற படத்தில் சீனுராமசாமி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் விஜய்சேதுபதி.
இவர் தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளதோடு ”மக்களின் செல்வன்” என்றும் அழைக்கப்படுகின்றார்.
அத்தோடு நடிகர் விஜய் சேதுபதி இந்த பெயரை வாங்க அவர் படாத கஷ்டங்கள் இல்லை. நடிகனாக சாதிக்க வேண்டும் என்று இளம் வயதில் இருந்தே நிறைய போராட்டங்களை சந்தித்தவர்.தற்பொழுது இளம் நடிகர்களுக்கு இவர் ஒரு உதாரணமாகவே இருந்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் ஒரு படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அத்தோடு இப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை ராஜு முருகன் தற்போது முடித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தி இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் வேறு நடிகரை தற்போது தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- ஆடையை சிறிதாக்கி அங்கத்தை காட்டும் ஸ்ருதி இப்படியா-பரபரப்பு காரணங்களை வெளியிடும் பயில்வான்..!
- லீனா மணிமேகலையின் ”காளி” பட சர்ச்சை – இணையம் எடுத்த அதிரடி..!
- பிரபல நடிகரின் யூடியூப் சேனலை வாங்கும் உதயநிதி? வெளியானது தகவல்..!
- “நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை…அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது..” பிரபல நடிகை பகீர் பேட்டி..!
- அட அனிருத்திற்கு அக்கா இருக்கிறாங்களா..? அடேங்கப்பா..என்ன ஒரு அழகு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!