• Sep 20 2024

தற்கொலை முயற்சி செய்தேனா.. முதன் முறையாக சீரியல் நடிகர் கொடுத்த விளக்கம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஒரு சின்ன ரோலில் நடித்து வந்தவர் ராகவேந்திரன் புலி. அவர் அந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறினார். தன் ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை, சம்பளமும் மிக மிக குறைவாக தருகிறார்கள் என சொல்லி பரபரப்பான புகார் சொல்லி இருந்தார்.

அதன் பின் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பதிவிட்டு வந்தார்.

அத்தோடு அவர் ஒருதலை காதல் தோல்வியானது தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும் சொல்லி இருந்தார்.

சமீபத்தில் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக இணையத்தளங்களில் செய்தி பரவியது.

ஆனால் அது உண்மை இல்லை என சொல்லி இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் .

நான் பாசிட்டிவ் ஆக தான் இருக்கிறேன், உடல்நிலை மோசமடைந்ததாக மட்டுமே நான் பதிவிட்டேன், அதை தற்கொலை முயற்சி என தவறாக செய்தி பரப்பாதீர்கள் .இதை பார்த்தவுடன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் பயந்திட்டார்கள்.தயவு செய்து இப்படி பொய்யா பரப்பாதீங்க.நான் அது வீட்டில் இருந்து காமெடியாக தான் பதிவு பண்ணினேன் என கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement