இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார்.
இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசை கச்சேரி தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.அதாவது பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கும் பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக பலரும் கூறி இருந்தனர்.
இந்த சர்ச்சை பற்றி பல்வேறு பிரபலங்கள் ரஹ்மானை விமர்சித்து வரும் நிலையில் ஆதரவாகவும் சிலர் தற்போது குரல் கொடுக்க தொடக்கி இருக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது ரகுமான ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பூ இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
தனது மகளும் அந்த இசை கச்சேரிக்கு சென்ற நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதா தெரிவித்திருக்கிறார்.Gateக்கு செல்வதற்கு மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது. ஆனால் டைமண்ட் பாஸ் வைத்திருந்தும் என் மகள் மற்றும் அவரது தோழிகளை உள்ளே அனுமதிக்கவில்லை.""ஆனால் இந்த பிரச்சனைக்கு ஏ.ஆர் ரகுமான் பொறுப்பல்ல. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான management செய்யாததே இதற்கு காரணம்" என குஷ்பு பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Heard about the major chaos and difficulties faced by #ARR fans at the chennai concert. Rahman has always made sure his fans are never disappointed. My daughter and her friends were among those who were denied entry despite a Diamond pass. It took them over 3 hours to reach the…
Listen News!