லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முால் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கைதி. இரவு நேரக் காட்சிகளாாக ஆக்ஷ்ன் படமாக எடுக்கப்பட்ட இப்படம் கார்த்தியின் கெரியரில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.
பாடல் இல்லாமல் ,கதாநாயகி இல்லாமல் ,தந்தை மற்றும் மகளின் பாசத்தை மையமாக வைத்து வித்தியாசமான ஜானரில் எடுக்கப்பட்ட இப்படம் அனைத்து ரசிகர்களை மட்டுமல்லாது பிரபலங்களையும் கவர்ந்திருந்தது.இப்படம் வெளியாகும் போதே அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி லோகேஷ் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி முடித்த பின்னர் கைதி 2 படத்தை இயக்குவார் என்று நம்பப்டுகின்றது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்த போது ‘கைதி 2 கண்டிப்பாக உருவாகும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன’ எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் இப்போது நடிகர் கார்த்தி கைதி 2 படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட 10 மடங்கு பட்ஜெட் அதிகமாக உள்ள படமாக இருக்கும். மேலும் கைதி 2வில் டில்லியும் ரோலக்ஸும் மோதுவார்கள்” என்றும் கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அண்ணனும் தம்பியும் மோதினால் எப்படி இருக்கும் என கூறி வருவதோடு மிகவும் ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Listen News!