• Sep 20 2024

'வைல்டு கார்டு' மூலம் என்ட்ரி கொடுக்கும் தினேஷ்! ரட்சிதாவின் கனவை நிறைவேற்றுவாரா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகை ரட்சிதா. இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.எனினும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து காணப்படுகின்றனர். ஆனால் இன்னும் முறைப்படி விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6ல் ரட்சிதாவும் ஒரு  போட்டியாளராகச் சென்றார். எனினும், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ரட்சிதா ஒரு முறை கூட தனது கணவர் தினேஷ் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எதையும் பேசவில்லை.


ரட்சிதா- தினேஷ் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து  சென்றிருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் அவர் திருமணமானவர் எனத் தெரிந்தும் சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை சுற்றி சுற்றி வந்தார்.

இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அந்த சீசனிலேயே தினேஷை எதிர்பார்த்தார்கள். எனினும், அவர் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் வெளியில் இருந்தே மனைவிக்கு ஆதரவு திரட்டி வந்த தினேஷும் அப்படியொரு வாய்ப்பை அன்று எதிர்பார்த்தார்.  


பிக் பாஸ் முடிந்து வெளியில் வந்த ரட்சிதா - தினேஷ் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர் பார்த்த போதும் அதுவும் நடக்கவில்லை. மாறாகப் பிரச்சனை மேலும் சிக்கலாவது போல் தினேஷ் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் ரட்சிதா. 

இவ்வாறான நேரத்தில்தான் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியது. கடந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் செல்ல விரும்பி அது நடக்காததால், இந்த சீசனில் கலந்து கொள்ள விரும்பி அதற்கான முயற்சியில் தினேஷ் ஈடுபட்டார் என்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர்.

பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்பவர்களின் பட்டியல் சோஷியல் மீடியாக்களில் வெளியான போதும் இவரது பெயர் ஆரம்பத்திலேயே இடம்பெற்றது.  

இது தொடர்பாகப் பேசியிருந்த தினேஷ், 'இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். கடந்த சீசனில் கலந்து கொண்ட ரச்சிதா டைட்டில் வாங்க ஆசைப்பட்டாங்க. அது நடக்கல. என்னால முடிஞ்சா அந்த டைட்டிலை நான் வாங்கி அவர்களுக்குச் சமர்ப்பணம் பண்ணுவேன்' எனச் சொல்லியிருந்தார்.


ஆனால் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய போது இவர் உள்ளே செல்லவில்லை. அத்துடன், ரட்சிதாவின் தந்தை திடீரென பெங்களூருவில் மரணம் அடைய, மருமகனாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், பிக் பாஸ் தொடங்கி ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் செல்கிறார் தினேஷ். அதன்படி, பிக்பாஸ் வீட்டில் மீதமுள்ள நாட்களில் கன்டென்ட் தந்து வலுவான ஒரு போட்டியாளராக  திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தினேஷின் தனிப்பட்ட குணத்தைப் பொறுத்தவரைக் அவரின் கோபத்தில் நியாயமிருக்கும் என்கிறார்கள் அவரது நண்பர்கள். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement