தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஜானரில் திரைப்படம் எடுக்கக் கூடிய இயக்குநர் தான் பாலா. இவர் தற்பொழுது சூர்யாவை வைத்து வணங்கான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.படப்பிடிப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலா தனது மனைவி மலரைப் பிரிவதாக சில மாதங்களுக்கு முதல் அறிவித்திருந்தார். பிரபல தொழிலதிபரிடம் மலர் காட்டிய நெருக்கமே இவர்களின் விவாகரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது நடிகர் பயில்வான் ரங்க நாதன் ஒரு அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார்.
அதாவது கணவனைப் பிரிந்தும் தனியாக அவரது அடுக்கு மாடி வீட்டில் வசிந்து வந்த மலர் அங்கு பாலாவின் நண்பராக இருந்த ரமேஸ் ராஜ் என்பவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளோர் கிசுகிசுவென பேச ஆரம்பித்தனார். இதனை அறிந்த பாலா தன்னுடைய அடியாட்களை அனுப்பி விசாரிக்க அனுப்பியிருக்கிறார்.
அடையாரில் உள்ள மாடிக்குடியிருப்புக்கு சென்ற பாலாவின் அடியாட்கள் ரமேஸ் ராஜை தாக்கியதால் அந்த குடியிருப்பு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸ் வரை இந்த விஷயம் எடுத்து செல்லப்பட்டது. விஷயம் அறிந்த மலர் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இந்த புகாரை ரத்து செய்திருக்கின்றார். மனைவியின் இந்த தவறான செயலினால் பாலா பெரும் மன உழைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பயில்வான் கூறியிருக்கின்றார்.
அத்தோடு பாலாவும் அவரது மனைவியும் விவாகரத்தில் உறுதியாக இருப்பதாகவும் பாலா தனது தனிப்பட்ட பிரச்சினைகளால் தான் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!