தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநராக வலம் வருபவர் தான் பாரதி ராஜா. இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இவர் தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை தனுஷின் திருச்சிற்றம்பலம் கார்த்தியின் விருமன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.இது தவிர கடந்த சில மாதங்களுக்கு முன்னர்உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது படக்குழுவை வாழ்த்தி பேசிய பாரதிராஜா கதாநாயகி சம்யுக்தாவைப் பற்றி பேசும்போது “சம்யுக்தாவைப் பார்க்கும் காலம் தப்பி பிறந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. கடலோரக் கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும் போது காதலித்து விடுவேனோ என்று தோன்றுகிறது” எனக் கூறிப் பேசி படக்குழுவினரைக் கலகலப்பாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!