இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்டம் தான் பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பானது முடிவடைந்து தற்பொழுது படத்தின் ப்ரமோஷன் பணிகள் யாவும் நடந்து வருகின்றது. அதில் முதல் கட்டமாக சென்னையில் சனிக்கிழமை முதல் புரோமோஷனல் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தற்போது வெளி மாநிலங்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதில் திருவனந்தபுரம், பெங்களூர், ஐத்தராபாத், டெல்லி, மும்பை ஆகிய இடங்களுக்கு அடுத்தடுத்து அவர்கள் செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று கேரளாவில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் மம்முட்டி மற்றும் பிரித்விராஜிற்கு நன்றி தெரிவித்தார். காரணம், ஒவ்வொரு மொழியிலும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு அந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் படத்திற்காக குரல் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!