• Sep 21 2024

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம்..ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவர் தான் மணிரத்னம்.

இவர் பிரமாண்ட படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவர். இவரது இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

பிரம்மாண்டத்தின் உச்சமாக படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.

அத்தோடு கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் டீஸர் வெளியாக மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாக உள்ளது.

படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

இயக்குநர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement