ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இயக்குநர் நெல்சன் கூட்டணி அமைத்துள்ளார். அதேபோல் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி செரீப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், காமெடி நடிகர் யோகி பாபு, விநாயகன், தமன்னா, மிர்ணா, வசந்த் ரவி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநரான நெல்சன் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் விஜய் ஏதாவது கூறினாரா என்று கேட்ட போது, ஜெயிலர் படம் நல்லா போய்ட்டு இருக்கு என்று தெரிஞ்சதுமே எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அது ரொம்ப சந்தோஷமாக இருந்திச்சு.
பீஸ்ட் படம் தோல்வி அடைஞ்சப்போ நான் போய் சேர் கிட்ட கேட்டேன், சேர் படம் தோல்வி என்று சொல்லுறாங்க, உங்களுக்கு என்மேல ஏதும் கோவமா என்று கேட்டேன். அதுக்கு அவர் நீங்க சொன்ன மாதிரி நான் நடிச்சேன், சில பேருக்கு பிடிச்சிச்சு சிலபேருக்கு பிடிக்கல அதை அப்பிடியே விட்டிடனும். அடுத்த படத்தை சூப்பராக பண்ணிட வேண்டியது தான் என்று சொன்னாரு.
அப்பிறம் திரும்ப கேட்டாரு, எனக்கும் உனக்கும் இருக்கிற பழக்கம் ஒரு படம் தானா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சொல்லுறவங்க என்ன வேணும் என்றாலும் சொல்லட்டும் என்றாரு. அந்த டைம்ல அவர் அதை நோர்மலாக எடுத்துக் கிட்டது பெரிய விஷயத் தான் என்று நெல்சன் கூறியுள்ளார்.
Listen News!