தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலி இரண்டாவது திருமணம் செய்தார்.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் தற்பொழுது இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.
அந்த வகையில் பீஸ்ட் மற்றும் சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் செல்வராகவன் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அவரது மனைவி கீதாஞ்சலியின் கொள்ளு பாட்டி மரணமடைந்துள்ளார்.
கீதாஞ்சலியின் கொள்ளு பாட்டியான அலமேலு பத்மநாபன், கடந்த 19ஆம் தேதி காலமானார். இதனை தனது சோஷியர் மீடியா பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார் கீதாஞ்சலி. இதுகுறித்து கீதாஞ்சலி ஷேர் செய்துள்ள பதிவில், "அவர் ஒரு முழுமையான ராக்ஸ்டார்! வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு இரும்புப் பெண்மணி. 923 இல் பிறந்த ஒரு பெண்ணுக்கு, அவரது எண்ணங்கள் சில சமயங்களில் மில்லினியல்களை விட முற்போக்கானவை.
அவருக்கு நீண்ட ஆயுள் இருந்தது. அவரது வாழ்க்கையில் நிறைய கெட்டது ஆனால் நிறைய நல்லதும் இருந்தது. நல்லவற்றில் கவனம் செலுத்தினார்! அவருடைய கொள்ளுப் பேரக் குழந்தைகளையும் (ரிஷி உட்பட) அனைவரையும் பார்த்தார். தான் நேசித்த அனைவரும் நலமாக இருப்பதை அறிந்து அவர் நிம்மதியாகச் சென்று விட்டார் என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கொள்ளுப்பாட்டியுடன் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ”ஆடி வெள்ளி… எப்பொழுதும் காப்பாய் காமாட்சி”-தனியாக கோயிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- ஒரு விஷயத்தை பிடிக்கவில்லை என்று ஹைலைட்டாக பேசாதீர்கள்- ரசிகர்களுக்கு கார்த்தி கொடுத்த அட்வைஸ்ட்
- தனுஷே ஒரு சூப்பர் ஹீரோ தான்”- தி கிரே மேன்” பட இயக்குநர்களான ருஸ்ஸோ பிரதர்ஸ் கொடுத்த விசேட பேட்டி
- சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதை தட்டித்தூக்குவாரா சூர்யா…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!