• Sep 20 2024

சினிமா ஆசை காட்டி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநர்....! வெளியான பரபரப்பு தகவல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சினிமா சான்ஸ் தருவதாக கூறி, 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திரை உலகில் நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசை, சினிமா மீது ஆர்வம் உள்ள நடிகைகளுக்கு இருக்க கூடிய பிரதான ஆசை தான். அதே போல் இந்த சினிமா ஆசையை தூண்டி விட்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்பதாக அவ்வப்போது பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுகிறது. 


அந்த வகையில் மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குநர் ஒருவர், ஏற்கனவே நடிகையின் தாயை காம வெறியுடன் வேட்டையாடிய நிலையில், 18 வயது கூட பூர்த்தியாகாத நடிகையிடம் சினிமா வாய்ப்பு தருவதாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.



 இந்த விசாரணையின் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாசிக் அலி வாய்ப்பு தருவதாக அந்த பெண்ணின் தாயாரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து அவர் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்று பின்னர் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement