தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் அந்த ஸ்ட்ரிக்ட் இயக்குநர். விருது இயக்குநர் என்று சொல்லும் அளவுக்கு தான் இயக்கிய படங்களுக்காக விருதுகளை பெற்று குவித்துள்ளார் அந்த இயக்குநர். எனினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊர்க்கார பெண்ணை திருமணம் செய்தார் அந்த இயக்குநர்.
இதையடுத்து வேலையில் கவனம் செலுத்தி வரும் இயக்குநர், தற்போது முன்னணி நடிகரை இயக்கி வருகிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.. அந்தப் படத்தின் படப்பிடிப்பு கடைக்கோடி ஊரில் நடைபெறுவதாக தெரிகிறது. படத்தை கதாநாயகனே தயாரிக்கிறார்.
ஸ்மூத்தாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் பெரும்புள்ளி ஒருவரால் புயல் வீசியது. அவருடனான பழக்கத்தால் திருமண வாழ்க்கைக்கு முழுக்கு போட்ட மனைவி இயக்குநரிடம் விவாகரத்து பெற்று சென்றுவிட்டாராம்.
மேலும் படக்குழுவினருக்கு படப்பிடிப்பு தளத்துக்கு அருகிலேயே தயாரிப்பு தரப்பு ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுத்துள்ளதாம். அங்கேயேதான் கதாநாயகனும் தங்கியிருக்கிறாராம். ஆனால் இயக்குநருக்கும் கதாநாயகனுக்கும் மட்டும் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ஹோட்டலில் ரூம் போட்டுள்ளார்களாம்.
இதனால் கதாநாயகனும் இயக்குநரும் தூரத்தில் உள்ள அந்த ஹோட்டலில்தான் தங்கி வருகிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவும் தாமதமாகிறதாம். தினமும் படப்பிடிப்பு தாமதமாவதால் செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கிறதாம் தயாரிப்பு தரப்பு..
Listen News!