பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கிக் கொண்டிருக்கிறார்
இதில் விக்ரம் ஆதிவாசி போன்ற வித்தியாசமான கெட்டப்பில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இதனால் படத்தை உலக திரைப்படமாக வெளியிடுவதற்காக எல்லா மொழிகளிலும் டப் செய்ய உள்ளனர்.
எனவே இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கான இயக்குநரை விக்ரம் தற்போது லாக் செய்துள்ளார். இது அவருடைய மகன் துருவ் விக்ரமால் அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஏனென்றால் மாரி செல்வராஜ் அடுத்து துருவ் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை பா. ரஞ்சித் தயாரிக்கிறார்.என தகவல் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவினை பட குழு வெளியிட்டிருந்தது .இதனை பார்க்கும் போது விக்ரமனின் உழைப்பு தெரிந்தது ஏன் இந்த படத்திற்காக இருவரும் மினாக்கடுகிறார்கள் என்று பார்த்தால் எப்படியாவது ஆஸ்காருக்கு அனுப்பி விட வேண்டும் என்கின்ற சிந்தனையில் தான் ரஞ்சித் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டு வருகின்றது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!