விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருபவர் வி.ஜே பிரியங்கா.
இவருடைய நகைச்சுவையான பேச்சும், எந்தச் சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வந்ததோடு பிக்போஸ் சீசன்-5 இல் போட்டியாளராகவும் களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் திருமணமாகியிருந்தபோதும், பிக்போஸ் வீட்டில் பிரியங்கா தன் கணவர் பற்றிப் பேசவே இல்லை, ப்ரீஸ் டாஸ்க்கில் கூட அவரது கணவர் வரவில்லை.
இதனால் பிரியங்கா அவரது கணவனைப் பிரிந்து விட்டதாக பலரும் புரளி கூறியிருந்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் "திருமணமான பிறகும் எப்பிடி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றீர்கள்" எனப் பிரியங்காவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பிரியங்கா "உங்களைப் புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியமாகும்" என்று பதிலளித்துள்ளார்.
பிரியங்காவின் இப்பதிலைக் கேட்ட ரசிகர்கள் பிரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டாரா? என்ற குழப்ப நிலையில் உள்ளனர்.
பிற செய்திகள்
- காப்பி சர்ச்சையில் சிக்கிய ரஜனியின் ஜெயிலர் பட போஸ்டர்..!
- நடிகை சினேகாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா..அவரே பதிவிட்ட பதிவு..!
- பிரபல நடிகரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்-தீயாய் பரவி வரும் தகவல்..!
- விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு CDP வெளியீடு….திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்வு
- அர்ஜுன் செய்த செயல்-மார்க்கெட் இல்லாமல் இருக்கும் இவர் இப்படி செய்யலாமா..? விளாசும் நெட்டிசன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!