• Sep 20 2024

இதயத்தை திருடாதே சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்பினை நிறைவு செய்த சீரியல் குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதில் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் இதயத்தை திருடாதே. இந்த சீரியலில் நவீன் மற்றும் ஹீமா பிந்து ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து இருந்தனர்.

Jeev Zala Yeda Pisa என்ற மராத்தி தொடரில் ரீமேக் தான் இந்த இதயத்தை திருடாதே தொடர்.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த தொடர் 2 பாகங்கள் வரை ஓடியுள்ளது. தற்போது இரண்டாவது பாகமும் முடிவுக்கு வந்துள்ளது,

அத்தோடு விரைவில் 3வது சீசன் தொடங்கும் என சீரியல் குழு தெரிவித்துள்ளார்கள். 2வது சீசனோடு நடிகை ஹீமா பிந்து தொடரில் இருந்து விலகுகிறார், இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்தது. தற்போது 2வது சீசன் இறுதி நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது.

கடைசி நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் வி மிஸ் யூ டீம் என தங்களது சோகத்தை கமெண்ட்டா போட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement