• Sep 21 2024

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?-வெளியாகிய முக்கிய அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் தான்  "பொன்னியின் செல்வன்". இப்படமானது இரண்டு பாகங்களாக உருவாகி வருவதோடு அதன் முதல் பாகமானது  செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இப்படத்திலிருந்து போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்களான பொன்னி நதி, சோழா சோழா ஆகியவை ஏற்கனவே வெளியாகி  படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், அடுத்தடுத்து அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்


இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.


அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் கதாபாத்திரம் என்ன என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோவுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement