அம்மன் படம் நடிக்கும் போது ரம்யாகிருஷ்ணன் செய்யும் செயல் பற்றி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை தனக்கான இடத்தை பிடித்து மக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை ரம்யாகிருஷ்ணன்.இவர் இளம் வயதிலேயே ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் 'வெள்ளை மனசு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'படிக்காதவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் 'ஜல்லிக்கட்டு, முதல் வசந்தம், பேர் சொல்லும் பிள்ளை, வானமே எல்லை' உட்படத் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகி, பல படங்களில் நடித்தார்.
எனினும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த 'படையப்பா' படம் தான் மீண்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் கம்பேக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் வில்லி வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். அத்தோடு 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் ராஜமாதா சிவகாமியாக வலம் வந்த இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்தார்.
இவ்வாறாக இன்றும் தன்னுடைய நடிப்புத் துறையை கைவிடாது தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்ற ரம்யா படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர்.
இந்நிலையில் இவர் பற்றி ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது .அது என்னவென்றால் இவர் அதிக அம்மன் ரோலில் நடித்து அசத்தி உள்ளார்.அவ்வாறு அம்மன் படங்களின் படப்பிடிப்பு தொடக்கம் முதல் இறுதி வரை அசைவ உணவு சாப்பிடாமல் செருப்பு அணியாமல் பணபக்தியுடன் நடித்து கொடுப்பாராம்.
Listen News!