நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட்,ஹாலிவுட் என பல படங்களில் கெமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தான் அட்ராங்கி ரே, தி கிரே மேன்.இப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மாத்திரமல்லாது வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் குட்டி ,உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் தனுஷ் நான்காவது முறையாக கைகோர்த்து உருவாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.
அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது இத் திரைப்படம் .
இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
மேலும் இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் திரை வாழ்க்கையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள திரைப்படமாக அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 46 கோடி வரை வசூலித்துள்ளதாம். விரைவில் படம் ரூ. 50 கோடியை தமிழநாட்டிலேயே வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Listen News!