இயக்குநர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்த 'சந்திரமுகி' திரைப்படத்தின் 2ஆவது பாகம் சமீபத்தில் வெளியாகி இருக்கின்றது.
ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.
இப்படம் திரையரங்குகளில் ரிலீஸான நேரம் தொட்டு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருப்பதோடு பாசிட்டிவ் விமர்சனங்களும் அதிகம் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் 'சந்திரமுகி-2' வெளிவந்து தற்போது நான்கு நாட்கள் முடிவடைந்துள்ளது. அந்தவகையில் உலகளவில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கெனவே மூன்று நாட்களில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ரூ. 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த வசூல் இனிவரும் நாட்களில் மென்மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!