விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.இந்த சீரியலில் இவர் நடித்த செம்பா என்ற கதாபாத்திரம் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தார்.
தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும் குழந்தை பிறந்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகியதோடு தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ஆல்யா மானசா சின்னத்திரை வருவதற்கு முன்பு நடந்த விஷயங்கள் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.அதில் அவர், 12-ம் வகுப்பு படித்து முடித்த பிறகு Yamaha ஷோ ரூமில் வேலை செய்தாராம். அங்கு சம்பளமாக இவருக்கு வெறும் ரூபாய் 5,000 கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.இப்போது சீரியல்களில் நல்ல சம்பளத்தை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!