இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வரும் திரைப்படம் 'போர் தொழில்'. தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே தரமான திரில்லர் கதையை இயக்கி ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.வெறும் ரூ 6 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூபாய் 28 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.
இந்நிலையில் போர் தொழில் படத்திற்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர் ரூபாய் 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!