• Sep 21 2024

குக்வித் கோமாளி சீசன் 3இன் டைட்டில் வின்னருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படுவது தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன்கள் கடந்தாலும் ஒவ்வொரு சீசனையும் ரசிகர்கள் கொண்டாடி ரசித்து வருகின்றனர்.

மேலும் போட்டியாளர்களுடன் கோமாளிகள் மட்டுமல்ல தொகுப்பாளர் ரக்ஷன் நடுவர்களான செப் தாஃமு வெங்கட் பட் ஆகியோர் செய்யும் சேட்டைகளும் ஏராளம்.ஒரு சமையல் நிகழ்ச்சியில் இவ்வளவு சுவாரஸியம் காட்டலாம் என்பதற்கு இந்த ஷோ ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது.

மேலும் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் பைனல்ஸ் ஒளிபரப்பப்படவுள்ளதால் இதில் யார் வெற்றி பெற்றார் என்பதை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் ஸ்ருதிகா தான் வின்னர் என தகவல் வெளியாகியிருந்தது. அவருக்கு அடுத்த படியாக யாரெல்லாம் இடம் பிடித்தார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் இந்த வின்னருக்கு எவ்வளவு பரிசு தொகை அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ.10 லட்சம் இந்த முறை வின்னருக்கு பரிசு தொகை வழக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, கடந்த சீசன் வின்னர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement